பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாணம்

நேற்றும் தயங்கினேன் இற்றைநாள் திண்ணமாய்
உள்ளந் திறந்தென் அன்பெலா முரைப்பேன்
என்றே நாள்தொறும் நாளெலாம் எண்ணியும்
அந்தியிற் காதலர் வந்திடுந் தருணம்
மொழியறியாது மூங்கையாய்
குழல்வளை திருத்தி நிற்கிறேன் தோழி.

80