பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மானிடா எழுக

                    1

மாண்பு மிக்குடைய மானிடா எழுக
வையகந் தன்னே வானக மாக்குக
புன்மையும் சூதும் பொய்ம்மையும் செய்து
உன்பெருங் குலமே ஒழிந்திடப் புரியேல்.

                    2

இறைவன் படைப்பினில் இப்பூ வுலகம்
ஒருபிடி மண்ணதில் ஓரணு நீதான்!
ஆயினும் உலகோ டகிலாண் டங்களும்
சாயவும் துளங்கவும் தழைந்து மேலோங்கவும்
வலியுடை எண்ணம் மனத்தினிற் கொள்ளும்
அலகிலா ஆண்மையோ டமைந்தவன் நீயே:
மாண்பு மிக்குடைய மானிடா எழுக
வையகந் தன்னை வானக மாக்குக.

                    3
                    

இறைவன் நினைக்குமுன் எழுந்திடும் உயிர்களில்
சிறுபுழு முதலாச் செறிந்தவை நாடில்
எண்ணிறந் தவையாம்; இவைகளுள் ஒருவன் நீ;
என்னினும் வரிப்புலி இடிக்குரற் சீயம்

                    96