இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நீல மலர்க்கண்
நீல மலர்க்கண் ணிரண்டு-என்றன் .
நெஞ்சை மயக்கிடும் வண்டு மாலை இருளென வளரும்-அவள் தன் மைக்குழ லில் உளம் தளரும்
கன்னக் குழிமதுத் தேக்கும்- அதுவென்
காதலை மீறியுண் டாக்கும் மின்னைப்போல் தோன்றும் சிரிப்பு-கொஞ்சம் வேறுபட் டாலெங்கும் நெருப்பு
கொஞ்சும் மொழிகுயி லோசை-அதிலே
குமிழியிட் டோங்குமென் னாசை
கஞ்ச மலர்முகைக் கொங்கை-ஏந்துங்
கவின்நிறை வாளந்த மங்கை அமுதுடன் வந்தசெய் யாளோ-என்மேல் அன்பு சிறிதும்செய் யாளோ எமனுக்கு நானின்று தத்தம்-மீட்கவே எண்ணிடு மோஅவள்சித்தம்?
99