பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 காந்தி அடிகள்

சாந்தத்தின் நல்லுருவம்

 சத்தியத்தின் குடியிருப்பு தர்மநெறி அன்பஹிம்சை
 தழைத்தோங்கும் தனிக்கோயில்

காந்தியெனும் பெயர்கொண்ட

 கருணேஒளிச் சுடர்விளக்கு கலியுகமாம் காரிருளைக்
 களைந்தோட்டும் அருட்சோதி

மாந்தருக்குள் ஒரு மஹாத்மா

 மதிமயங்கி அணுக்குண்டாம் மரணவிளை யாட்டினிலே
 மகிழ்வெய்தும் வையகத்தே

போந்தற்கோர் எச்சரிக்கை

 புகன்றுசென்ற மெய்ஞானி பாரதத்தின் தனிப்பெருமை
 புத்தன் வழிதழைக்க வந்த 
                  புனிதனாமே 
            100