உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

தென்னாட்டுப் போர்க்களங்கள்

தின் கரு அகழ்ந்து உலகில் முதன் முதலாகப் பொன் வெள்ளி முதலிய உலோகங்களைக் கண்டவர்கள் என்றும், அருங்கலை வேலைப்பாட்டில் சிறந்தவர்களென்றும் கருதப்படுபவர்கள் அவர்கள். இன்றுகூட இத்தொழில்களில் உலகெங்கும் இவ்வினத்தவரோ அல்லது அவர்களுடன் குருதிக் கலப்புடையவர்களோ தான் திறம்பட ஈடுபட்டு உழைக்கின்றனர் என்றும் கேள்விப்படுகிறோம்.

உலகெங்கும் பாம்பு வழிபாட்டைப் பரப்பியவர்களும் இந்த நாகர்கள் என்றே கருதப்படுகிறது. இது அவர்கள் முற்காலப் பொதுப்பரப்புக்கு மட்டுமன்றி, மலையாள நாட்டில் சிறப்பாகப் பரவிய செறிவுக்கும் சான்று ஆகும். பாம்புக் காட்டு நம்பூதிரிகள் என்று கூறப்படும் மலையாள பிராமணர்கள் உண்மையில் பண்டை நாகரின் பெருங்குடி மரபினரே யாதல் கூடும்!

புத்தர் பிறந்த சாக்கியர் குடி நாகமரபு சார்ந்ததென்று அவர் பிறப்பிடத்தின் அகழ்வாராய்ச்சி ஏடுகள் கூறுகின்றன. புத்தமதம் வங்கத்திலும், தென்னாட்டிலும், இலங்கையிலும், பர்மா சீனாவிலும் விரைந்து பரவியதற்கு இவ்விடங்களில் உள்ள மக்களில் பெரும் பகுதியினர் நாகமரபினராக இருந்த்தே தலையான காரணம் எனறும் கூறப்படுகிறது.

இந்த நாகர்கள் யார்? எந்த இனத்துடன் நெருங்கிய தொர்டபுடையவர்கள்? இவர்கள் பண்டைப் பெருவாழ்வு அழிந்து உலகெங்கும் இன்று சிறுமையுற்று நலிவானேன்? இன்னும் ஆராய்ச்சியுலகம் தெளிவாக வரையறுக்க முடியாத கேள்விகள் இவை! ஆயினும், ஆராய்ச்சிக்கு இங்கே கொடிகாட்டல் முடியாததன்று.

நாகர்களுக்கென்று இன்று தனி மொழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் சில இடங்களில் திராவிட மொழிகளையும், சில இடங்களில் வேற்றின மொழிகளையும் பேசுகின்றனர். ஆனால் எங்கும் அவர்கள் நாகரிகம் ஒன்றே! எங்கும் அவர்கள் தம்மை நாகர்கள் என்றே கூறிக்கொள்கின்றனர். பாம்பு என்ற பொருளில் இப்பெயர் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் பொதுவான பெயரேயாகும். ஆனால் நாக மரபினரின் கிளையினத்தவரான வில்லியர் முதலிய பெயர்கள் தென்னாட்டிலும் வட இந்தியாவிலும் ஒருங்கே 'வில்' என்ற தமிழ்ச் சொல்லடிப்படையான தமிழ்ப் பெயராகவே காணப்படுகின்றன. வார்ப்புரு:Noc