பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99

‘ஐயா’ அவர்களின் பொன் விழா இன்றும் நம் மனக் குறிப்புப் புத்தகத்தில் பொன் வண்ணம் கொண்டு விளங்கின்றது. நமது மாண்புமிகு தலைவர் நன்றி தெரிவித்துப் பேசும்பொழுது, அறிவும் பண்பும் சேர்ந்த ஒன்றுக்குப் பெயர்-தமிழ். அந்தத் தமிழ் வழங்கும் நிலத்திற்குப் பெயர்தான்-தமிழ்நாடு. அந்தத் தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் பாடுபடும் தொண்டனுக்குப் பெயர்தான்-- சிவஞானம்!” என்று புலப்படுத்தினர்கள். ஆம்; வாழும் தமிழ் ம. பொ. சி!

‘அருமைமிகு தமிழகம் முழு சுயாட்சி உரிமை அடையும் வரையில் நான் ஓய்ந்திருக்கமாட்டேன்; உரிமைக்கு வேங்கடம்; உறவுக்கு இமயம்; நட்பிற்கு உலகம் என்ற வகையில் தமிழரசுக் கழகம் தொண்டாற்றும்; கழகம் ஈடுபட்டு எய்திய வெற்றிகளில் எல்லா அரசியல் அமைப்புகளுக்கும் பங்கு உண்டு,” என்று திரு ம. பொ. சி. தம் நன்றியுரையில் தெரிவித்த பான்மை பொது மக்கள் அனைவரையும் பெருமையுறச் செய்தது.