பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தென்னாட்டுக் காந்தி!

முதல் உலக யுத்தம் சூடு பிடித்தது, சூடி காட்டி நடந்து கொண்டிருந்த நேரம் அது!

பாரதத்தாய் அடிமைப்பட்டு, அல்லல்பட்டு, தொல்லைப் பட்டுக் கொண்டிருந்த வேளை அது! உலக அரங்கத்தில் ‘மண் ஆதிக்க வெறி’ மூண்டது.

இந்திய நாட்டிலே ‘சுதந்திர வெறி’ மூண்டது.

பாரதத் திரு நாட்டின் தவப் புதல்வர்கள் சுதந்திர வேட்கை மிகக்கொண்டு, நாட்டுப் பற்றையே உயிர்ப்பாகக் கொண்டு, விடுதலை வேள்வித் தீயில் குதிக்க அணி வகுத்துப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்நிலையின் நிகழ்ச்சிகளை நாளிதழ்களில் படித்து அதன் விளைவாக, ஆவேச உணர்ச்சி கொண்டு இயங்கத் தலைப்பட்டது ஓர் உள்ளம்; அந்த உள்ளம், தமிழ்ப் பண்பில் பண் பட்ட உள்ளம். அக்கணமே, காங்கிரஸ் இயக்கத்தில் இயங்கும் வகையில் தன்னைக் காணிக்கை வைத்துக் கொண்டது: முழு நேரப்பணிக்குத் தன்னை ஆளாக்கிப் பெருமையும் நிறைவும் கண்டது!

தமிழ் நாட்டுக் காந்திஜி என்று ஏற்றிப் போற்றப்பட்டு வருகின்ற முதல் அமைச்சர் திரு காமராஜ் அவர்கள் நமது அறுபதாம் ஆண்டு ஆரம்ப விழாவை தாம் கொண்டாடுவதற்குப் பதிலாக, அன்னாரது விழாவினை. தமிழ் கூறு நல்லுலகம் கொட்டு முழக்கோடு, கோலாகலப் பெருமிதத்தோடு, ஒட்டி வந்துள்ள நன்றியுணர்ச்சிக் கலவையோடு கொண்டாடியது.