பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

சிந்தனை மேதை திரு கே. ஏ. அப்பாஸ், ‘பிளிட்ஸ்’ ஏட்டிலே, நம் முதலமைச்சரைப் புகழந்து,” விடுதலைப் பெரும் இயக்கத்தின் பழம் பெருந் தலைவரான உங்களை தமிழகத்தின் மக்கள் மட்டுமின்றி, இந்திய மக்கள் எல்லோருமே மிகுந்த அன்புடன் போற்றுகிறார்கள்,” என்று வாழத்துதல் உரைத்திருக்கிறார். இவ்வுரை, அடக்க சீலரான நம் தேசீயத் தலைவரது சமதர்மக் கொள்கைக்குக் கிட்டிய மற்றொரு வெற்றியன்றோ!

“நாடுதான் என் குடும்பம்; இக் குடும்பத்தைக் கட்டிக் காத்து, நல்லபடியாக வாழவைத்தே தீருவேன். நம்மை இனி யாரும் அடிமை கொள்ள முடியாது. நமது சக்திகளை ஒன்று திரட்டி, நம் காலத்திலேயே ஏழ்மையை ஒழிப்போம். மற்ற தலைவர்கள் ஒத்துழைப்புடன் பிரிவினைப் பேயை விரட்டுவோம்; மக்கள் அனைவரையும் வாழ்விப்போம்!”

காந்திவழி மெய்த் தொண்டரின் இத்தகைய சீரிய நற் கருத்துக்களை நாம் என்றென்றும் நினைவிற்கொண்டு, அன்னாரது வாழ்வைப் பெருக்கி அருளவும், அதன் மூலம் நாட்டுப்பணி சிறக்க வழிகாட்டவும் எல்லாம் வல்ல இறைவன் அவரை வாழ்த்தி அருளுமாறு தொழுகின்றோம்!