பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தீயின் வெம்மையை நாம் பல்வகையிலும் உணர்ந்து விட்டோம். பல்வேறுவகைப்பட்ட சக்திகள் பூராவையும் நாம் ஒன்று திரட்டி, நமது நாட்டின் பொது எதிரியை விரட்டியடிக்க கங்கணம் பூண்டுவிட்டோம். நீதியும் நிதியும் நம் பக்கம் குவிந்து வருகின்றன!

இந்நிலையிலே, இந்திய-சீன எல்லைத் தகராற்றினே சமரசப்பண்பு மூலம் ‘ராசி’ பண்ணிவைக்க ‘கொழும்பு’ முன்வந்தது. இலங்கை, கானா, ஐ. அ. குடியரசு ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பும் நல்லெண்ணமும் முன் வந்தன. கொழும்பு மாநாட்டின் யோசனைகள் லோக்சபையில் விவாதிக்கப்பட்டு ஒரு முடிவு காணவேண்டும்.

“1962 செப்டம்பர் 8ம் தேதிக்கு முன் இருந்த நிலைகளுக்கே சீனப்படைகள் வாபஸாக வேண்டும் என்ற இந்தியாவின் பிரதானமான கோரிக்கையைத் திருப்தி செய்வதாகவே உள்ளன!” என்று நம் பிரதமர் நேருஜி அறிவித்தார்.

ஈனப்புத்தி படைத்த சீனர்களின் பாரம்பரியப் படுமோசப் புத்தியை இந்தியா இனியும் அனுமதிக்காது என்பது உறுதி!

சுவாமிகள் அன்று சொன்னார்:

“இந்தியாவை இனியாரும் அடக்கமுடியாது. இனியும் அது தூங்கப்போவதில்லை. அந்நிய சக்திகள் எவையும் அதனைப் பின்னுக்கு இழுக்கமுடியாது. காலம் கடந்த இந்தியா இப்பொழுது எழுந்து நிற்கத் தொடங்கி விட்டது!”

ஆம்; இந்தியா எழுந்து நிற்கத் தொடங்கி ஆண்டுகள் பல ஆகிவிட்டனவே!