இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
25
நீதி கடந்து, நிர்ணயிக்கப்பட்ட எல்லை கடந்து வந்த சீனனை இந்தியா விரட்டித் துரத்தியடித்ததே தக்க சான்றல்லவா?
சுவாமிகள் எதிர்பார்த்த இந்தியாவின் புத்துயிர் வாழ்வு மலர்ச்சி எய்தத் தொடங்கி விட்டது.
இந்தியன் ஒவ்வொருவனும் தன் ஆற்றலை, கடமையை நாட்டுப்பற்றை உணரத் தலைப்பட்டு விட்டான்.
இதுவே இந்தியாவின் மகத்தான வெற்றியன்றோ !....
குடியரசு நாளின் மகத்துவம் இவ்வாண்டு கூடுதலான குதுகலத்துடன் கொடிக்கட்டிப் பறந்தது. ‘புவிக்குளே முதன்மையுற்ற’ அண்ணல் காந்தியடிகளின் அமர நினைவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலிகள் நமக்கு வீரசக்திகளே அருளும் என்பது உறுதி!...