பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அடைந்தே தீருவோம்!” என்று தம்பட்டம் கொட்டி, தம்மைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் அப்பாவி மக்களின் கண்களிலே மண்ணைத்தூவி, தங்கள் பைகளைப் பணத்தால் நிரப்பி வருவது உலகம் அறிந்த ரகசியமாகும். திராவிட நாடு அடைவது பகற்கனவு என்பதைத் தமிழகத்தின் தலைவர்களும், தி. மு. க. விலிருந்து பிரிந்த படைவீரர்களும் பட்டி தொட்டிகளிலெல்லாம் நிரூபித்து விட்டார்கள்!

ஏழைகளைப் பகடைகளாக்கி, பணக்காரர்களை வாழ வைக்க திரை மறைவில் அரசியல் சூதாட்டம் ஆடி வருகிறார், பரிதாபத்துக்குரிய ராஜாஜி. அவரது செல்வாக்கு பறிபோய் விட்ட உண்மையை, டி. டி. கே. அவர்கள் எதிர்ப்பின்றி அடைந்த முதல் வெற்றி நிதர்சனமாக எடுத்தியம்பி வருகிறது.

சமதர்மப் பொதுவுடைமை வாதம் பேசி, பிறந்த மண்ணையே நம் எதிரிகளுக்குக் காட்டிக்கொடுக்கும் நாசகாரக் கும்பலாக கம்யூனிஸ்ட் கட்சிக்கு கேரளத்திலேயே வாழ்வு இல்லாதபோது, இங்கே மட்டும் எப்படி வாழ்வு ஏற்பட முடியும்? தேர்தல் களத்தில் குதிக்கப் போகும் பிற கட்சிகளின் பெயர்களைக்கூட பொது ஜனங்கள் அறிந்திருக்க முடியாது.

அண்மையில், பிரதமர் நேருஜி ஜலந்தரில் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளும் செயல் திட்டங்களும் தான் இந்தியாவை முன்னேற்றும்; திட்டமிட்டுச் செய்யப்படும் அபிவிருத்தியைத் தொடர்ந்து நடத்திச் செல்லும், மற்றச் சிறு கட்சிகள் தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொண்டுதான் இருக்கும்,” என்று உரைத்ததையும் நாம் என்றென்றும் - நினைவிலும் - நெஞ்சிலும் பதிய - வைத்துக்கொள்ள வேண்டும் - இந்தியாவை அச்சுறுத்திவரும் - சீனா,