பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57


ஆம்; உணர்ச்சி மிகுந்த பேச்சு இது!

கட்சி என்றால், அதற்கெனத் தனித்தன்மை கொண்ட திட்டவட்டமான சில கொள்கைகள் இருந்தாக வேண்டும். அத்தகைய உட் கருத்துக்களை நிலையான மனப் பக்குவத்தோடு, நியாயமான முறையில் உருவாக்கத்தக்க தலைவர்கள் அந்தந்தக் கட்சிக்குக் கிட்ட வேண்டும். இவ்விதமான பொதுக்கருத்தை மாற்றிவிட்டார் திரு சி. என். அண்ணாத்துரை. அவர் கொண்டிருக்கும் வலுவிழந்த கருத்துக்களுக்கு ஏற்றவகையில்தான் அவரது கட்சியும் இயங்கி வருகிறது. தெளிந்த இதயத்தில்தான் தெளிவான எண்ணங்கள் பிறக்க முடியும். தெளிவான எண்ணங்கள் தாம் நாட்டையும் நாட்டு மக்களையும் நல்வழிப்படுத்த முடியும். ஆனால் தி. மு. கழகத்தையோ, அதன் தலைவரையோ நம் கருத்திற் கொணர்ந்து பார்த்தால், அவரை நம்பியுள்ள பரிதாபத்துக்குரிய ஆயிரக் கணக்கான நம் நாட்டுச் சகோதரர்கள் தாம் நம் ஆழ்ந்த அனுதாபத்துக்கு இலக்காகின்றார்கள்.

தேர்தலில் தி. மு. கழகம் நாட்டுப் பிரிவினையை அடித்தளமாக் கொண்டு இயங்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால், அவர்களுக்குக் கிடைத்த தொடர்போ, அல்லது இணைப்போ சுமுகமான முறையில் ஏற்பட்டிருக்க முடியாது! தேர்தலில் பண்பு கெட்ட வழிகளில் சுவரொட்டிகளை ஒட்டியும், ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி ஐந்து ஏக்கர் நிலம் போன்ற தவறான கணைகளைக் கொண்டு அப்பாவி மக்கள். நெஞ்சைத் தம் வசப் படுத்தியும் ஏதோ ஓர் அளவுக்கு, சென்ற தேர்தலைக் காட்டிலும் இம்முறை கூடுதலான இடங்களைப் பிடித்து விட்டார்கள். சந்தர்ப்பங்கள் சிலரை - வாழவைப்பது உண்டல்லவா? அவ்வகையில் தான், இவர்களுக்கு இப்போது ஒரு திருப்பம் ஏற்பட்டிருக்கிறதே தவிர,