பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

வேறு எந்தச் சிறப்பும் மறைந்திருப்பதாக எண்ண மார்க்கம் இல்லை! “இருபது லட்சம் பேர்கள் எங்களுக்கு வோட்டு போட்டிருக்கிறார்கள். இந்த இருபது லட்சம் மக்களும், எங்களது திராவிட நாட்டுக் கொள்கைக்காகவேதான் ஓட்டு போட்டிருக்கிறார்கள்!” என்று துணிந்து பச்சைப் பொய் ஒன்றைத் திரித்து விட்டிருக்கிறார் மாஜி எம். எல். ஏ. தலைவர்! “மேல் சடைக்கு நான் நிற்க ஒப்பவில்லை. இன்னும் ஐந்து ஆண்டுகளில் காஞ்சி மக்களைத் திருப்திப் படுத்தும் வண்ணம் நல்ல முறையில் சேவை செய்வதே என் கடமையாகும்.” என்று அழகாக நீலிக்கண்ணீர் வடித்த தலைவரின் ஒப்பாரியை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது, அவருக்குக் கிட்டியுள்ள ராஜ்யசபைப் புதுப் பதவி!

மாபெரும் தோல்வியில் மறைந்திருக்கும். புது வெற்றியிலே திரு அண்ணாத்துரை கண்மூடித் திளைத்திருக்கும் நேரமாயிற்றே இது! ஆகவேதான், அவர் நேருஜிக்குப் பதில் சொல்லவும் முனைந்து விட்டார் போலும்! “சிவப்புத் துணியைக் கண்டு மிரண்டு கோபமடையும் காளையைப்போல, பிரிவினைக் கொள்கையைக் கண்டு நேரு ஆத்திரப்படுகிறார்!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சிலரைத் தவிர ஏனையப் பொதுமக்கள் எல்லோரும் இப்போது அறிஞரையும் அவரது பச்சோந்திப் பேச்சுக்களையும் எடைபோட்டு, எண்ணிப் பார்க்கத் தலைப்பட்டு விட்டார்கள். ஆகவே, தி, மு. கழகம் செப்பிடு வித்தை காட்டிவரும் இந்தத் “திராவிட நாடு” என்பது. இன்றல்ல, என்றுமே உருவாக்க முடியாத ஒன்றாகும்! இப்பொழுது கிடைத்துள்ள அதிகப்படியான இடங்களை வைத்துப் பேசிப் பொதுமக்களை இன்னும் ஏமாற்றும் வழிகளில் இவர்கள் இறங்கி வருகிறார்கள். அடுத்த தேர்தலில் தி. மு. க. தான் ஆளப்போகிறதாம்!