பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

சொல்மாரி பொழிந்து வருகிறார்கள் தம்பிமார்களும் புது முகங்களும்! பாவம், பரிதாபத்துக்குரியவர்கள்! இப்போது கிடைத்துள்ள பதவியின் மூலம், இந்த ஐந்தாண்டுகளிலே டில்லிக்குப் பறந்து திரும்புவதுடன் பெருமைப்பட்டுக் கொள்ளாமல், தம்முடைய பிரிவினைக் கொள்கையில் திரு அண்ணாத்துரைக்கு மெய்யாகவே ஒரே ஒரு முறையேனும் இவர் ‘திருவாய்’ மலர்ந்து, தம் பிரிவினைக் கொள்கையைத் தர்க்க ரீதியான அரசியல் அடிப்படையுடன் பேசத் தெம்பு பெறுவாரா? ஊஹூம், ஒருகாலும் இந்நிகழ்ச்சி இந்த ஐந்தாண்டுக்குள் ஏற்படச் சாத்தியமே இல்லை!

எங்களுடைய இந்தக் கூற்றுக்கு ஒரே ஒரு அத்தாட்சியை மட்டும் எடுத்துக்காட்ட விழைகிறோம். சென்ற மாதத்தின் - மத்தியில் எஸ். ஐ. ஏ. ஏ. மைதானத்தில் திரு அண்ணாத்துரை பேசுகையில், திராவிட நாடு கோரிக்கையை நான்கணாவுக்கு ஒப்பிட்டுப் பேசினார். “நாலணா கேட்டால் தான், ரொம்ப நேரமாகக் கேட்கிறானே, இரண்டணாவாவது கொடுப்போம் என்று மனம் மாறுவார்கள். சிலர் அதே போன்று, திராவிட நாடு கேட்டால் தான், கடைசியில் தமிழ் நாடாவது கிடைக்கும்,” என்று தி. மு. க. மூலர் பிரசங்கம் செய்தார். தம் பேச்சைப் பத்திரிகைகளில் படித்ததும், அவருக்கே தன் சுயரூபம் வெளிப்பட்டுவிட்டதில், அசடுவழியத் தொடங்கிவிட்டிருக்க வேண்டும் உட்னே ஓர் அறிக்கையை வெளியிட்டுவிட்டார். “என் பேச்சுக்கு வேண்டுமென்றே சிலர் வேறு அர்த்தம் கொடுத்துத் திரித்து வெளியிடுகிறார்கள்!” என்று புலம்பி முடித்தார் அவர். இந்த ஒரு பேச்சே போதும், தி. மு. க. வின் ஏமாற்று வித்தையை மெய்ப்பிக்க!

அகில உலகப் புகழ் படைத்த ஒப்பற்ற தலைவர் நேருஜி எங்கே?