பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

தன்மையில், நாட்டுப் பிரிவினைக் கிளர்ச்சியைத் தூண்டும் கூட்டத்தவரை எச்சரித்த மனப்பாங்கு இருப்பதை யார் தாம் உணராமல் இருப்பார்கள்? ஏழை எளியவர்களுக்கு நன்மை செய்வதே தங்கள் கனவு என்று தம்பட்டம் அடித்துவரும் சுதந்திரக் கட்சியைச் சாடும் முறையில், திரு. பிரசாத் அவர்கள் உரை நிகழ்த்துகையில் ஏழை மக்களின் நலனில் முதல் அக்கறை செலுத்தி வருவது நம் காங்கிரஸ் ஸ்தாபனம் என்பதையும் திட்ட வட்டமாகச் சொல்லிவிட்டிருக்கிறார், ராஷ்டிரபதி.

எவ்வகையில் பார்த்தாலும், சிறப்புத்தன்மை கொண்டதாக அமைந்து விட்டது, பாரதத்தலைவரின் பேருரை.

‘சிறந்த தேசபக்தர், நுண்ணிய சிந்தனாவாதி, நல்ல கர்மவீரர், உண்மையான காந்தி பக்தர்’ என்று புகழ்ந்து கொண்டே இருக்கும் நேருஜியின் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் காரணமாகி ஒளிவிளக்காகத் திகழும் திரு. ராஜன்பாபு அவர்களின் பேரையும் புகழையும் பணியையும் நினைவில் வைத்து அஞ்சலி செய்வது நம் நாட்டு மக்களின் கடமையாகும்.