இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
75
தாய்மொழிப் பற்றும், தேசிய உணர்வும் இரு கண்களாக வாய்க்கப்பெற்ற தமிழார்வலர்களின் இடையறாத நினைவூட்டலினாலும், தொடர்ந்து முழங்கிய பேச்சுக்களாலும், இப்பணி வெற்றி பெற்றிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.
தமிழக மக்களின் ஒருமித்த போற்றுதலுக்கு உட் பட்டது தமிழ் நாட்டின் அமைச்சரவை.
ஆனால், ஒன்று :
ஆட்சிபீடம் அதன் கடமையை இயற்றி விட்டது. ‘பழைய வீம்புகளை’ மறந்து இந்த நல்லுறவைப் பயன்படுத்திக் கொள்வதில் பல்கலைக் கழகம் முனையவேண்டும். தமிழில் தரமான பாட நூல்கள் வெளியிடுவதில் புத்தகப் பண்ணைகள் அக்கறை காட்ட வேண்டும்; பாடங்களைத் தமிழாக்கம் செய்வதைக் கல்வி மேலதிகாரிகள் பொறுப்புடன் கண்காணிக்க வேண்டும்!