பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

உணர்ச்சி ஒற்றுமை உருவானால் தான், தேசிய ஒற்றுமை உருவாக முடியும்! உலகம் புகழும்

உத்தமத் தலைவர் நேருஜி, தமிழர்களின் உள்ளங்களைத் தொடப் பாடுபட வேண்டுமே தவிர, உணர்ச்சிகளைத் தொட முயலக் கூடாது. கன்னித் தமிழ் மொழியின் பொற்புணர்ந்து, அதன் உரிமையில் குறுக்கிடும் இந்த ‘லிபி! நஞ்சை விலக்கி, மூன்று கோடித் தமிழர் நெஞ்சங்களில் என்றென்றும் வாழும் உறவைப் பாரதப் பிரதமர் பலப் படுத்திக் கொள்வாரென்றும் எதிர்பார்க்கின்றோம்.