பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

இத்தகைய சிறப்புமிக்க தெய்வமறையை அருளிய திருவள்ளுவரின் திருவுருவத்தைச் சிறப்பாக வரைந்த திரு கே. ஆர். வேணுகோபால சர்மா அவர்களுக்கும் நம் பாராட்டு உரியது.

நாளது வைகாசி மாதத்தில் வரயிருக்கின்ற தெய்வப் புலவர் வள்ளுவனாரின் நினைவு நாளுக்கு இந்நிகழ்ச்சி நல்லதொரு முன்னோட்டம் போன்று அமைந்திருப்பதில் மகிழ்வு பெறுகிறோம், பாட்டுக்கொரு புலவன் பாரதி, கப்பலோட்டிய செம்மல் வ. உ. சி-இப்படி, தமிழகத்தின் பெருமைக்கும் தமிழ் மொழியின் நலனுக்கும் பணி புரிந்த தகைமையாளர்களின் திருவுருவங்களையும் தொடர்ந்து தபால் தலைகளில் அமைத்து வெளியிடுவதில் திரு சுப்பராயன் அவர்கள் மனப்பூர்வமாகக் கருத்துச் செலுத்துவாரென்றும் நாம் நம்புகின்றோம்.