பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

தென்னைமரத் தீவினிலே...

பரிசோதிக்கப்பட்டு, அதில் ஒரு லேபிள் தொங்கவிடப்பட்டது.

சாமான்களை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர்கள் எண்ணியதற்கு மாறாக அவைகள் ஒரு அலுவலரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டு உள்ளே எடுத்துச் செல்லப்பட்டன. பயணிகள் அனைவரும் இப்படித்தான் செய்தார்கள்.

அடுத்தபடியாக அவர்கள் வேறொரு அறையின் முன்பாக நகர்ந்து கொண்டிருந்த வரிசையில் சேர்ந்து கொண்டனர்,

விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள், பயணிகள் ஒவ்வொருவரையும் முழுமையாக சோதனையிட்டனர். பின்னர் அவர்கள் விமானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாபு தன் தந்தையிடம், “நம்மையும் சோதனை செய்வார்களா?” என்று கேட்டான்.

“ஆமாம்,” என்று அவர் தலையசைத்தார்.

“ஏன்? எதற்காக இங்கு இப்படிச் செய்கிறார்கள்?” என்று மெல்ல தந்தையின் காதருகே கேட்டான்.

“விமான பயணிகள் விதிவிலக்கான பொருள்களையோ, சட்டவிரோதமான சாமான்களையோ உரிய முறையின்றி கொண்டு செல்கிறார்களா என்பதை பரிசோதிக்கிறார்கள்”, என்றார்.