பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தென்னைமரத் தீவினிலே...

“எப்படியோ வள்ளி இத்தனை காலம் பட்ட துன்பங்களுக்குக் கடவுள் இப்போதாவது கண்ணைத்திறந்து பார்த்து, ஒரு விடிவு காலம் ஏற்பட்டதே!” என்றாள்.

அருணகிரி எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு படுக்கச் சென்று விட்டான்.

இரவு சரியாக மணி 11 இருக்கும், அரைத் தூக்கத்திலிருந்த பரமகுருவின் காதில் காலிங் பெல் மணி ஒலித்தது.

விளக்கைப் போட்டுக் கொண்டு கதவைத் திறந்தபோது, எதிரே கூர்க்கா நின்று கொண்டிருந் தான். பரமகுருவைப் பார்க்க வேண்டுமென்று யாரோ வந்திருப்பதாகச் சொன்னான், உள்ளே அனுப்புமாறு கூறிவிட்டு பரமகுரு காத்திருந்தார்.