பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தென்னைமரத் தீவினிலே...

“விஜயன் என்ன சொல்லி அனுப்பினார்?" என்று பரமகுரு கேட்டார்.

அவருடைய அந்த கேள்விக்கு குமரேசனுடைய வாயிலிருத்து எந்தவிதமான பதிலும் உடனடியாக வரவில்லை . சிறிது நேரம் மவுனமாக தலை குனிந்து கொண்டிருந்தவன் சட்டென்று வெடித்தாற்போல் குலுங்கி அழுதான். கனக விஜயனுடைய பெயரைச் சொல்லி வந்தவனுடைய இந்த திடீர் அழுகை பரமகுருவை மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாக்கியது.

“என்ன விஷயம் குமரேசா? ஏன் அழுகிறாய்! விஜயனுக்கோ, வள்ளியம்மைக்கோ ஏதாவது உடம்பு சரியில்லையா?” கவலையுடன் விசாரித்தார் பரமகுரு.

“எப்படிச் சொல்வது என்று தான் ஐயா புரியவில்லை; விஜயன் அண்ணனுடைய குடும்பத்திற்கு கடவுள் பயங்கர கொடுமை இழைத்து விட்டான்!” என்று கூறிக் கொண்டிருக்கும்போதே துக்கம் தாளாமல் தடுமாறினான்.

பிறகு அவனே தன்னைத் தேற்றிக் கொண்டு வள்ளி இறந்த கதையை பரமகுருவிடம் கூறினான்

முருகா, முருகா என்று இடிந்து போனாற் போல் கத்தினார் பரமகுரு. அவரது குரலைக் கேட்டு லட்சுமி அம்மாளும், கல்யாணியும் தூக்கம் கலைந்து எழுந்து வந்தார்கள்.