பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

115

“அம்மா, இந்த விசயத்தை மாமா மூலம் பெரியம்மாவுக்குச் சொல்லலாமா? சொன்னால் கேட்ட உடனேயே இருக்கிற குறை உயிரும் போய் விடும்! என்ன செய்வது என்று புரியவில்லை,” என்றார் பரமகுரு.

உடனே லட்சுமி அம்மாள், ஞானாம்பாளைப் பொருத்தவரை வள்ளி என்றோ இறந்து விட்டாள். என்னமோ கடைசி காலத்தில் கண்திறக்கிற போது இந்தப் பெண் கதி இப்படி ஆகி விட்டது. இதைப் போய் சொல்லி என்ன செய்ய? எதற்கும் உன் மாமாவை கேட்டு செய்யலாம் என்றாள்,”

“சரி,” என்றார் பரமகுரு.

உடனே கல்யாணி காந்திமதியிடம் மட்டும் விஷயத்தை இப்பொழுதே சொல்லிவிடு. இந்த அருணகிரியைத்தான் என்ன செய்வது என்று புரியவில்லை! எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறானோ? எதற்கும் தூங்குகிறவனைப் எழுப்பிச் சொல்ல வேண்டாம். காலையில் புறப்படுகிற போது சொல்லிக் கொள்ளலாம்” என்றாள் கல்யாணி.

பரமகுருவிற்கும் அதுவே சரியாகப்பட்டது மனைவியை எழுப்பி செய்தியைச் சொல்ல அவர் மாடியை நோக்கி விரைந்தார்.