பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


17
வேட்டை

போலீஸ் பிடீயிலிருந்து தப்பிய விஜயனின் மனம் அமைதியின்றி தவித்துக் கொண்டிருந்தது.

நாட்டிற்கு உழைக்கும் தான் என்றாவது ஒரு நாள் வள்ளியை அனாதையாக்கி விட்டு இறக்க நேரிடும் என்றுதான் அவன் எண்ணிருந்தான். ஆனால் இன்று-அவனை அனாதையாக்கி, அவள் சென்று விட்டாள்.

அவனது கவலையெல்லாம் இடுகாட்டிலிருந்து காரில் ஏற்றி அனுப்பிய அருணகிரியும், மற்றவர்களும் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்திருப்பார்களா? என்பதுதான்.

இதைத் தெரிந்து கொள்ள ஒரு முறை அருணகிரியை நேரில் பார்த்து விட்டால் போதும். அதன் பிறகு என் உயிர் போவதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என்று விஜயன் எண்ணிக் கொண்டான்.