பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

127

விஜயன். இதைக் கேட்டவுடன், “உள்ளே வாருங்கள் ஐயா” என்று உள்ளே அழைத்துச் சென்று கதவைத் தாழிட்டாள். பிட்சுவிற்கும், உடன் வந்துள்ள அருணகிரிக்கும் ஆசனமிட்டு விட்டு அறையின் ஒரத்தில் துளியில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் அருகில் சென்று நின்று கொண்டிருந்தாள்.

“பரவாயில்லை; நீயும் உட்காரு லிசியா, நான் உன் கணவர் விக்ரம சிங்காவின் உயிர் நண்பன் கனக விஜயன். உன்னைச் சில நிமிஷங்கள் இந்த பிட்சு வேடத்தில் ஏமாற்றி விட்டதற்கு மன்னிக்க வேண்டும். இது என் மகன் அருணகிரி,” என்று. விஜயன் கூறி முடிப்பதற்குள்,

லிசியா வியப்பின் எல்லைக்கே சென்று திரும்பினாள்.

“எதற்கு இந்த வேடம் அண்ணா? என்னால் நிச்சயமாக அடையாளம் கண்டு கொள்ளவே. முடியவில்லை. வள்ளியம்மை சவுக்கியமாக இருக்கிறாளா என்று விசாரித்தாள்.

லிஸியாவின் கணவர் விக்ரமசிங்காவிற்கு, பாக்கு பாக்டரியில் வேலை. பெண் குழந்தை பிறந்து ஆறு மாதமாவற்குள் ஒரு லாரி விபத்தில் இறந்து விட்டான். விஜயனும் அவனும் நீண்ட நாளைய நல்ல நண்பர்கள். அவனுடன் விஜயன் இங்கு அடிக்கடி வருவான்.