பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

137

கூறிவிட்டு பரமகுருவையும், காந்திமதியையும் பார்த்தான்.

சட்டென்று குழந்தையை காந்திமதியிடம் நீட்டினான்.

சோபாவில் உட்காாந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த பரமகுருவிற்கு, ‘பகீர்’ என்றது. அதில் கண்ட செய்தியை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.

மாமாவினுடைய மூன்று கம்பெனிகளையும் குண்டர்கள் தரைமட்டமாக்கி விட்டனர். எவ்வளவு பெரிய நிறுவனங்கள் நிமிட நேரத்தில் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டன. வருத்தத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இந்த விஷயத்தை அம்மாவிடமும், கல்யாணியிடமும் எப்படித் தெரிவிப்பது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது டெலிபோன் மணி அலறியது. பரமகுரு அவசரமாக போனை எடுத்து ‘ஹலோ!’ என்றார்.

எதிர் முனையிலிருந்து குணரத்னா குட் மார்னிங் கூறிவிட்டு, “பேப்பர் படித்தீர்களா?” என்று கேட்டார்.

“இப்போதுதான் பார்த்தேன் என்னால் நம்பவே முடியவில்லை. மிஸ்டர் குணரத்னா,” என்றார் பரமகுரு தழுதழுத்த குரலில்.