பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தென்னைமரத் தீவினிலே...

“என்னாலும் இந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.” எனக்கு விடியற்காலை மூன்று மணிக்கே தகவல் வந்து விட்டது. நேற்று மாலை ஐந்து மணி வரை எல்லா கம்பெனியிலும் ஷிப்ட் வேலை முடிந்து போன பிறகு திட்டமிட்டது போல இந்த சதி நடந்திருக்கிறது. பல நிறுவனங்கள் நம்முடையதைவிட பெரியவை பிரபலமானவை. நேற்று வேலை முடிந்து வந்தது; இன்று காலை டிரஸ் செய்து கொண்டு வேலைக்குப் போக, நிறுவனமே இல்லை.

எல்லாரும் சாப்பிட்ட பிறகு, பரமகுரு அவர்களிடம் பேப்பரில் வந்துள்ள செய்தியைப் படித்துக் காட்டினார்.

அதைக் கெட்ட கல்யாணி வெகுநேரம் கற்சிலை போல் அப்படியே இடிந்து போய் உட்கார்ந்து விட்டாள்.

"ஐயோ இந்த வயதான காலத்தில் பொன்னம்பலத்திற்கு இப்படியொரு சோதனையா?” என்று லட்சுமி கண்ணீர் விட்டாள்.

கல்யாணி சிறிது நிதானத்திற்குப் பிறகு “மாமாவிற்கு நான் என்ன பதில் சொல்ல மாமி?” என்று பரமகுரு கேட்டார்.

கல்யாணி சட்டென்று தன்னை சமாளித்துக் கொண்டு, “இது என்ன பொய்யா; அல்லது