பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

141

உள்ளத்தில் மூண்டெழுந்த துக்கத்தை அவனால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. சென்ற வாரம் இதே விமானநிலையத்திற்கு தன் தாயோடு வரும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தான்.

இந்த வாரம் அதே விமான நிலையத்தில் தாயை இழந்து அனாதையாக நிற்கிறான்.

உண்மையில் தாயை மட்டும்தானா?

லிஸியோ வீட்டோடு, தந்தையையும் இழந்து விட்டான்.

மரணக் கூண்டினுள் நுழைபனைப் போல் அன்று தன் தந்தை தன்னிடம் பிரியா விடை பெற்றுச் சென்ற காட்சியை இப்போது நினைத்தாலும் அவன் உடல் நடுங்குகிறது.

அன்று இதே விமான நிலையத்தில் செல்வந்தர்கள் மத்தியில் ஓர் ஏழையாய் தன் தாய் ஒதுங்கி நின்றாள்.

இன்று-

பல லட்சங்களுக்கு அதிபதியாக இதே இடத்தில் தன்னோடு நிற்பதற்கு அந்தத் தாய் இல்லை; அவள் அன்பு இல்லை!

அன்று ஏழையாக இருந்தாலும், தந்தை பாசமும், தாயன்பும் அவனுக்குப் பஞ்சமில்லாமல் வற்றாமல் கிடைத்து வந்தன.