பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தென்னை மரத் தீவினிலே...

பார்க்க முடியாது, உனக்கும் உன் அம்மாவிற்கும். உணவிற்கும், உடைக்கும் தான். என்னால் சம்பாதிக்க முடிகிறது. மீதி நேரமெல்லாம் ஈழத் தமிழர் நிலை உயர உழைக்கிறேன். எனது இந்த லட்சியத்தை விட்டு விட்டு என்னால வாழ முடியாது. இலங்கையின் காட்டையும் மேட்டையும் திருத்தி செல்வம் கொழிக்கும் பூமியாக; தேயிலைக் காடாக மாற்றியது தமிழனின் பட்டுக்கரங்கள் தான் தமிழர்கள் இங்கு சிந்திய ரத்தமும், வியர்வையும், கண்ணீரும் வீண்போகக் கூடாது.” என்பார்.

அப்போது விமான நிலையத்திலிருந்து அறிவிப்பு ஒலிக்கவே கூர்ந்து கேட்டான் அருணகிரி.

“சென்னையிலிருந்து வந்து கொண்டிருக்கும் ‘ஏர்லங்கா’ விமானம் இன்னும் சில நொடிகளில் விமான நிலையத்தை வந்தடையும்!”