பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4
உலகம் தெரிந்தவன்

விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட கார், பெரிய பெரிய தெருக்களையும், அழகிய பல கடை வீதிகளையும் கடந்து வேகமாகச் சென்றுகொண்டிருந்தது.

அதே சமயத்தில், இவர்களோடு இருக்க வேண்டுமென்று தன் உள்ளத்தில் எழுந்த தவறான ஆசையினால்தான் தன் தாயை தனியே அனுப்பி விட்டதாக எண்ணி அருணகிரியின் மனம் மிகுந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தது.

இன்னும் எங்கோ தொலை தூரம் போவது போல் வேகமாக ஓடிக்கொண்டிருந்த கார், பட்டென்று வேகம் தனிந்து, ஒரு காம்பவுண்டிற்குள் நுழைந்து, போர்டிகோவின் முன் வந்து நின்றது.

முன்னதாக வந்து சேர்ந்துவிட்ட மாமாவின் கார் ஓரமாக நின்றுகொண்டிருந்தது.