பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

31

”சரி... சரி! உன் சவுகரியம் எதுவோ அது தான் முக்கியம். மகாநாடு என்றைக்கு?”

“நாளைக்கு!”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு பணியாள், தாழ்ந்த குரலில் பொன்னம்பலத்திடம் டிபன் தயாராய் இருப்பதாய் தெரிவித்தான் .

“வா, குரு சாப்பிடலாம்,” என்றவர், “ஆமாம் பாபு, ராதா, அருணகிரி எல்லாம் எங்கே?” என்று கேட்டுக் கொண்டே எழுந்தார்.

பரமகுருவும், மாமாவும் டைனிங் ஹாலை அடைந்தபோது, மற்றவர்கள் எல்லாருமே அங்கே இருந்தனர்.

“எங்களுக்காகவா காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று பொதுவாகக் கேட்டுவிட்டு மாமா ஒரு ஆசனத்தில் அமர்ந்தார்.

சாப்பாட்டு அறையில் போடப்பட்டிருந்த மேஜை வழவழப்பாகவும், பளபளப்பாகவும் இருந்தது. எதிரே உட்கார்ந்து கொண்டிருக்கிறவர்களுடைய முகம் அதில் தெரிந்தது

பாபுவும் அருணகிரியும் சொற்ப நேரத்திற்குள் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிய மனமில்லாதவர்களைப் போல் சேர்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தனர்.