பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

39

“அருணகிரி! நீ டிரஸ் பண்ணிக்க நான், அம்மா,பாபு, ராதா எல்லாரும் சீக்கிரம் புறப்பட வேண்டாமா?” என்று துரிதப்படுத்தினாள் தங்கமணி.

அதற்கு மேலும் அருணகிரியால் மெளனமாக இருக்க முடியவில்லை. விமான நிலையத்திற்கு என் அம்மா எல்லோரையும் வரவேற்கத்தான் வந்தேன். அம்மாவோடு வீடு திரும்ப வேண்டிய என்னை பாபு அங்கிருந்தபடியே அழைத்து வந்தான்

“இந்த டிரஸ்ஸோடு என்னை உங்களோடு அழைத்துப் போகச் சம்மதமானால் நான் வருகிறேன். இல்லாவிட்டால் இங்கேயே இருக்கிறேன் எனக்கு கொழும்பு நகரம் ஒன்றும் புதிதில்லை. அங்குள்ள எல்லா இடங்களையும் என் அப்பாவே எனக்குச் சுற்றிக் காண்பித்து விட்டார்,” என்றான்.

“சரி... சரி... தெரியாமல் கேட்டு விட்டேன். இதற்காக நீ கோபித்துக் கொண்டு எங்களுடன் வராமல் இருந்து விடாதே. வா, நாம் போய் முதலில் காரில் ஏறிக் கொள்ளலாம்” என்று தங்கமணி அழைத்தாள்.

உடனே அருணகிரி, “அவசரப் படாதே தங்கமணி எல்லோரும் ஏறிக் கொண்ட பிறகு இடத்திற்குத் தகுந்தாற் போல் நான் வந்து உட்கார்ந்து கொள்கிறேன்” என்றான்.