பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தென்னைமரத் தீவினிலே...

நல்ல உயர்ந்த ரகத்திலே எடுத்துக் குடுங்க" என்றாள்.

அப்பொழுதுதான் அருணகிரிக்குப் புரிந்தது, எதற்காக தங்கமணி தன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறாள் என்று.

அருணகிரி, சட்டென்று, “தங்கமணி” எனக்கு அப்படியெல்லாம் எதுவும் வேண்டாம், எல்லாம் இப்போது நான் போட்டிருப்பதே போதும்,” என்று எவ்வளவோ மறுத்தான்.

“ஒன்றும் பதில் பேசக்கூடாது; உனக்குப் பிடித்தமான கலரை தேர்ந்தெடுக்கிற உரிமை மட்டும்தான் உண்டு. மறுத்துப் பேசினால் தாத்தாவிற்கு போன் பண்ணி சொல்லிவிடுவேன்,” என்று பயமுறுத்தினாள் தங்கமணி.

அத்தனையும் மிக விலை உயர்ந்த ரகங்கள். பள்ளிக்கூடத்தில் தன்னோடு படிக்கும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் சிலர் இம்மாதிரி டிரஸ் போட்டுக் கொண்டு வருவதும், மலிவு ரகத் துணி அணிந்திருக்கும் தன்னை அவர்கள் ஏளனமாக பேசுவதும் அவன் நினைவிற்கு வந்தன.

அருணகிரி தன் முன் பரப்பிக் கிடக்கும் உடைகளில் தனக்குப் பிடித்தமான இரண்டு செட்டை தேர்ந்தெடுத்தான்.