பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

43

“அருணகிரி! இதில் ஒன்றை உள்ளே டிரஸ்சிங் ரூமில் போய் போட்டுக் கொண்டு வா,” என்று தங்கமணி கூறினாள்.

அந்த பிரம்மாண்டமான கடையில் தங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் பல ஊழியர்கள் முன் பதில் ஏதும் கூற முடியாமல் உள்ளே போய் உடையை மாற்றிக் கொண்டு வந்தான் அருணகிரி.

கடை சிப்பந்தி ஒருவன், அருணகிரி கழற்றிப் போட்ட பழைய உடையையும், மற்றொரு புதிய செட் உடையையும் அழகாக ‘பாக்’ செய்து காரில் கொண்டு போய் வைத்துவிட்டு வந்தான்.

கவுண்டரில் எழுந்து நின்று கொண்டிருந்த காஷியரிடம், “இந்த பில்லை, பாட்டி கணக்கிலே எழுதிக்கிங்க,” என்று கூறிவிட்டு அவசரமாக அருணகிரியை அழைத்துக் கொண்டு காரில் ஏறி விட்டாள்.

தங்கமணியின் புத்திசாலித்தனமான காரியத்தையும், எல்லாரிடமும் காட்டும் அன்பையும், பண்பையும் கண்டு மிகவும் வியந்தார்கள் காந்தி மதியும், பாபுவும், ராதாவும்.