பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

ஆகாசக் கடையா அதிசயக் கடையா!

அருணகிரி மற்றும் குழந்தைகள் காரில் கொழும்புவை சுற்றிப் பார்க்க சென்று கொண்டிருந்தனர்.

கொழும்பு நகரிலுள்ள கடை வீதிகளின் சில பகுதிகள் "பிரின்ஸ் வீதி" ஆகியவை லண்டன் மாநகரத்து அழகிய வீதிகளை நினைவூட்டும் வண்ணமிருந்தன. இவை அழகாகவும் பல மாடிக் கட்டிடங்கள் நிறைந்தனவாகவும் இருந்தன.

இலங்கையின் பழம்பெருமைகளை உணர்த்தும் கொழும்பு நகர மியூசியம் சிறப்பாக இருந்தது

"இதுதான் கண்டி மன்னர்களின் தங்க சிம்மாசனம், இவைகள் கண்டி மன்னர் அணிந்திருந்த உடைகள்; இவை வரலாற்றுச் சிறப்பு மிக்க பழங்காலத்து சிலைகள்" என்று கனகசபை குழந்தைகளுக்கு கூறினார்.