பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

61

செவலவத்தை வழியாகக் குறுக்கு வழியில் நடந்தால், இங்கே பஸ் வருவதற்குள், ஆறு மணிக்கெல்லாம் வீட்டையே அடைந்து விடலாம். கால்கள் தான் நோவெடுக்கும்.

கால் வலியைப் பார்த்தால் வீட்டுக்குப் போய் விளக்கேற்ற வேண்டாமா? கூட்டம் முடிந்து பசியோடு வருகிற புருஷனுக்கு சுடு சோறு ஆக்கிப் போட வேண்டாமா? சூ... கால் வலியென்ன; பெரிய கால்வலி; வீட்டுக்கு போனதும் சுடு தண்ணி ஒத்தடம் கொடுத்தால் எல்லாம் சரியாகி போகும்!

வள்ளியம்மை வேகமாக நடக்கத் தொடங்கினாள். கையிலிருந்த பை சிறியதாக இருந்தாலும் அதிலிருந்த ஆரஞ்சு ஆப்பிள், திராட்சை இவற்றால் கனம் அதிகமாகவே இருந்தது. ஆரஞ்சு என்றால் அத்தானுக்கு உயிர். ஆசை ஆசையாச் சாப்பிடும். வீட்டுக்குப் போனதும் பழத்தை சுளை சுளையாக உரித்து வைத்து, சோறு சாப்பிட்ட பிறகு தின்னக் கொடுக்க வேண்டும்.

கிழங்கு கிழங்கான ஆப்பிளை மட்டும், அத்தானை விட்டு நறுக்கித் தரத் சொல்விச் சாப்பிடணும்; அதுதான் அழகா நறுக்கும். திராட்சை ஒண்னுக்குத்தான், உரிக்கவோ, நறுக்கவோ வேண்டாம் தண்ணி ரொப்பின கோலிக் குண்டு கணக்கா-

தளதளன்னு குலையோடு இருக்கு. ஒவ்வொண்னா- அப்படியே பிச்சு அத்தான் வாயிலே