பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தென்னைமரத்
தீவினிலே...

1
உல்லாசப் பயணம்

பாபுவுக்கும், ராதாவுக்கும் ஏகக் குஷி. இலங்கைக்கு தங்களையும் அழைத்துச்செல்ல தந்தை சம்மதித்ததே அந்த மகிழ்ச்சிக்குக் காரணம்.

பாபுவின் தந்தை பரமகுரு சென்னையில் ஒரு தொழிலதிபர். இலங்கையில் நடைபெறும சர்வதேச வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்ள கம்பெனி விஷயமாக அவர் மட்டுமே முதலில் செல்வதாக இருந்தது. ஜூலை மாத மத்தியில் பயண டிக்கெட் வாங்கும் நேரத்தில் பரமகுருவின் தாயார் லட்சுமி, தானும் இலங்கை வருவதாகக் கூறினாள்.