பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தென்னைமரத் தீவினிலே...

இல்லாமல் கதவில் அவன் பூட்டிய பூட்டு அப்படியே தொங்கிக் கொண்டிருந்தது.

இதை சற்றும் எதிர்பாராத விஜயன் வேகமாக மாரியம்மாள் வீட்டை நோக்கிச் சென்றான் அவள் வேலைக்குப் போயிருந்தாள். ஒரே ஓட்டமாக குமரேசன் வீட்டிற்கு சென்று விசாரித்தான். அவன் தன்னைத் தேடிக்கொண்டு சென்றிருப்பதாக குமரேசன் மனைவி கூறினாள்.

என்ன செய்வது என்று தோன்றாமல் நேரே தன் வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்தான். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த ஒரு பையன, “ஏன் மாமா அருணகிரி இன்னிக்கு ஸ்கூலுக்கு வரலே? டீச்சர் கேட்டாரு” என்று கூறிக் கொண்டே சென்றான்.

விமான நிலையத்திற்கு சென்ற அருணகிரி, வள்ளியம்மை இருவரும் ஏன் இன்னும் வீடு திரும்பவில்லை? எங்கே போனார்கள் இவர்கள். ஒரு வேளை பரமகுரு எல்லாரையும் தன்னோடு அழைத்துக்கொண்டு போய் விட்டாரோ? ஆனால், பொன்னம்பலம் வீட்டிற்கெல்லாம் வள்ளியம்மை போகக் கூடியவள் அல்லவே!

முதல் நாள் மீட்டிங் முடிந்ததிலிருந்து அவன் ஒன்றும் சாப்பிடவில்லை. நேரம் செல்லச் செல்ல அவன் கவலை அடைந்தான். அதற்கு மேலும் அர்த்தமில்லாமல் அந்தத் திண்ணையில்