பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தென்னைமரத் தீவினிலே...


“சீக்கிரமா ஊர் சுற்றி முடிச்சிட்டா சீக்கிரமா வருவாங்க; மெல்ல ஊர் சுற்றிப் பார்த்தா மெல்ல வருவாங்க!” என்று கிண்டல் செய்தான் அவன்.

ஆனால் தொடர்ந்து விஜயனால் சமாதானமாக இருக்க முடியவில்லை. தன் மனைவியும், மகனும் நூற்றுக்கு ஒரு சதம்தான் இந்த வீட்டில் இருக்கக் கூடும் என்று எதிர்பார்த்தான். எனினும், மாலை வரை வெளியே சென்றவர்களுக்காக அங்கேயே காத்திருந்து பார்த்தான். அவர்கள் யாரும் வராமல் போகவே ஏமாற்றத்துடன் திரும்பவும் தன் வீட்டிற்கே பஸ் ஏறினான்.