பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10
ஒரு மலர் உறங்குகிறது

னைவியையும், மகனையும் தேடி விஜயன் அலைந்தான். அவனுக்கு பசி வயிற்றை கிள்ளியது.

இலங்கை கார்பரேஷன் விளக்குகள் எரியத் துவங்கி இரவை பகலாக்கி கொண்டிருந்தன.

விஜயன், தான் இருக்கும் தெருவிற்குள் நுழைந்தபோது அவனை சிலர் வித்தியாசமாக பார்த்தார்கள். எல்லார் வீட்டு வாசல்களிலும் விளக்கு எரிந்து கொண்டிருந்தன. விஜயன் வந்து விட்டதைக் கேட்டு உள்ளேயிருந்து சிலர் வெளியே வந்து பார்த்தபடி நின்றார்கள்.

தூரத்தில் அவன் வருவதைப் பார்த்ததும், குமரேசனும், சில நண்பர்களும் வேகமாக ஓடி வந்து அவனுடன் சேர்ந்து கொண்டார்கள். ஆனால் அவர்கள், அவனுடன் எதுவும் பேசாமல் மவுனமாக வந்து கொண்டிருந்தனர். எல்லார்