பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

வீரர் குலம் விளங்கவந்த திருவிளக்கு

“அருள் நிறைந்த அரசியே! உன் கனவு மகிழ்ச்சிக்குரியதே! உனக்கொரு பிள்ளை பிறக்கப் போகிறான். அந்தப் பிள்ளை பேராற்றல் பொருந்தியவனாக இருப்பான். இந்த அளவிற்குத் தான் நான் உறுதியாகக் கூறமுடியும். ஏனெனில் அவன் பெரியவனாவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. அரண்மனை வாழ்விலே அவன் நிலைத்திருந்தால் ஒரு பெரிய மாவீரனாகத் திகழ்வான். நாடுகள் பலவற்றை வென்று மிகப் பெரிய வெற்றி வீரனாக விளங்குவான். ஆனால், அவன் கானக வாழ்வை நாடிச் செல்லவும் கூடும். அவ்வாறு சென்றாலும் உலகம் வணங்கும் ஓர் ஒப்பற்ற ஞானியாகத் திகழ்வான். உலகிற்கு வழிகாட்டும் ஓர் ஒளி விளக்காக விளங்குவான்” என்று சொல்லிவிட்டு அந்தக் கிழவர் கூட்டத்திற்குள்ளே புகுந்து மறைந்துவிட்டார்.

அந்தக் கிழவர் சொல்லிய ஒவ்வொரு சொல்லும் மாயாதேவி கண்ட கனவுக்குச் சரியாகப் பொருந்தி யிருந்தன. அவருக்குத் தகுந்த பரிசு கொடுக்க வேண்டும் என்று சுத்தோதனருக்குத் தோன்றியது. ஆனால், அந்தப் பெரியவர் அகப்பட்டால் தானே!