பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

22

வாக அதன் உடலில் பாய்ந்திருந்த அம்பை உருவி வெளியே எடுத்தான். புண்ணைக் கழுவித் துடைத்து, குருதி மேலும் வெளிப்படாதபடி புண் வாயை அடைத்துத் துணி வைத்துக் கட்டினான்.

தாரா இனிப் பிழைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகு தான் அவனுடைய பணிகள் நின்றன.

“சித்தார்த்தா, இந்தத் தாராவுக்கும் உனக்கும் முன்னமேயே உறவிருக்கிறதோ? நேராக உன் காலடியில் வந்து தஞ்சமடைந்து விட்டதே. நீயும், அதைக் காப்பாற்றி விட்டாயே!" என்று கேட்டான் கூட இருந்த ஒரு சிறுவன். "ஆம்' இதுவரை எனக்கும் இதற்கும் உறவு இருந்ததோ இல்லையோ, இனிமேல் நிச்சயமாக உண்டு. நான் இந்தப் பறவையை வளர்க்கப் போகிறேன்" என்று கூறிச் சோர்ந்து கிடந்த பறவையைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான் சித்தார்த்தன்.

அப்போது சிறிது தூரத்திலிருந்து ஒரு பையன் ஓடிவந்தான்.