பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

30

என்ன ஆகும்? பெரிய அரசருக்குப் பிறகு இந்தப் பேரரசு எப்படி நடைபெறும்? எதிரிகள் சுற்றி வளைத்துக் கொள்வார்களே! என்றெல்லாம் மக்களும் அரசியல் அலுவலாளர்களும் ஆங்காங்கே பேசிக்கொள்ளத் தொடங்கினர்.

சுத்தோதனரின் கட்டுத்திட்டங்களை யெல்லாம் மீறி இந்தப் பேச்சு சித்தார்த்தனின் செவிகளிலும் விழுந்தது.

“அப்படியா பேசிக் கொள்கிறார்கள்? நான் என் திறமையைக் காட்டுகிறேன் பார்!” என்று சித்தார்த்தன் தன் உயிர் நண்பன் ஒருவனிடம் கூறினான்.

சித்தார்த்தன் போட்டியில் ஈடுபட விரும்புகிறான் என்ற செய்தி கேட்டவுடன் சுத்தோதனர் பெருமகிழ்ச்சி யடைந்தார். உடனே போட்டிவிழா நடப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்.

குறிப்பிட்ட நாளொன்றில் போட்டி விழா நடைபெற்றது. நகரெங்கும் முரசறைபவர்கள் போட்டியாளர்களைக் கூவி அழைத்தார்கள். இளவரசனைப் போட்டியிலே எதிர்த்து நின்று