பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

வீரர் குலம் விளங்கவந்த திருவிளக்கு

இளமையும் துடிப்பும் கொண்ட அந்த வீர இளைஞர்கள் யாராலும் பருமையும் திண்மையும் கொண்ட அந்த வில்லை வளைக்க முடியவில்லை.

கடைசியாகச் சித்தார்த்தன் எழுந்தான். அந்த வில்லை நோக்கி நடந்தான். பருத்த அந்த வில்லை நிமிர்த்தினான். தரையில் ஒரு புறத்தை அழுத்தி மிக எளிதாக வளைத்துக் கண்மூடிக் கண் திறப்பதற்குள் நாண்பூட்டி விட்டான். நாண்பூட்டிய உடனே அதைத் தோளுக்கு நேரே தூக்கிப் பிடித்து அம்பொன்று பொருத்தி விண் என்ற ஒலியுடன் விடுத்தான். சித்தார்த்தன் விடுத்த அந்த அம்பு விண்வீதி வழியாக விரைந்து சென்று நகரின் எல்லை கடந்து காட்டுக்குள்ளே வெகு தொலைவிலே போய் விழுந்தது.

கூடியிருந்தவர்கள் பிரமித்து நின்றார்கள் இளவரசனைப் பற்றித் தாங்கள் எண்ணிக் கொண்டிருந்த தெல்லாம் எவ்வளவு தவறு என்று உணர்ந்தார்கள். பலபல பாராட்டுரைகள் கூறி மகிழ்ந்தார்கள்.