பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

உண்மை தேடிப் புறப்பட்ட ஒளிமாணிக்கம்

“உண்மையா? அப்படியானால் புறப்பட ஏற்பாடு செய்" என்றான் சித்தார்த்தன்.

நந்தன் வேட்டைக்குப் போக வேண்டிய ஏற்பாடுகளை யெல்லாம் செய்து முடித்துவிட்டுத் திரும்பி வந்தான்.

சிறிது நேரத்தில் கபிலவாஸ்து நகரையடுத்திருந்த காட்டை நோக்கி குதிரை வீரர் கூட்டம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. சித்தார்த்தனும் நந்தனும் சில வீரர்களும் தாம் அந்தக் கூட்டத்தில் இருந்தனர்.

வேட்டைக் காட்டை அடைந்தவுடன் குதிரைகளை ஓரிடத்தில் கட்டிவிட்டு வீரர்கள் காட்டிற்குள் நுழைந்தனர்.

நெடுநேரம் அவர்கள் காடு முழுவதும் சுற்றியலைந்தும் ஒரு விலங்குகூடக் கண்ணில் படவில்லை. கதிரவன் உச்சியை அடைந்த பொழுது அவர்களுக்கு களைப்பும் பசியும் மேலிட்டது. ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கட்டுச் சோற்று மூட்டையை அவிழ்த்து உண்டனர். தண்ணீர் அருந்தினர். நிழலில் படுத்து அரைத் தூக்கமாக உறங்கினர்.

3