பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

போதி மரத்தடியில் ஞான மடைந்த மாதவச் சுடர் மணிதான் புத்த பெருமான். இன்ப வாழ்வு நிறைந்த அரண்மனையிலே பிறந்து அரசபோகத்தை அனுபவித்து வளர்ந்த புத்த பெருமான் ஞான மார்க்கத்தில் செல்ல நேர்ந்ததே, அவருடைய 'தன்னைப் போல் பிரரையும் எண்ணும்' சமத்துவ தத்துவம் தான். பிறர் துயர் கண்டு பொறுக்காத அவருடைய நெஞ்சம்தான் தம் சுக போகங்களை யெல்லாம் துறந்து காட்டுக் கேகும்படி செய்தது.

உலக மக்கள் உவப்புடன் வாழ ஓர் ஒளிவழியைக் கண்டு பிடித்த அந்தத் திலகத்தின் வாழ்க்கை வரலாறு கல்வி கற்கப் புகும் மாணவ மாணவிகளுக்கும் ஓர் ஒளிவழியைக் காட்டும் திறன் படைத்ததாகும். கற்பார் கருத்தை ஈர்க்கும் வண்ணம், சிறந்த செந்தமிழ் நடையில் ஆசிய ஜோதியாம் அண்ணலின் வாழ்க்கையை சிறப்புற ஆக்சித் தந்துள்ளார் திரு நாரா நாச்சியப்பன்!