பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

54

என்று தன் மனத்திற்குள்ளே எண்ணிக் கொண்டான்.

ஆடையணிந்து முடிந்தபின், தன் தேரிலே ஏறப்போனான். தேர்த்தட்டில் ஒரு காலை எடுத்து வைத்தபோது, அரண்மனையிலிருந்து ஓர் ஆள் ஓலை கொண்டுவந்தான். “இளவரசே ஒரு மகிழ்ச்சியான செய்தி. யசோதரா தேவியார் ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். என்று அந்த ஆள் பொங்கும் மகிழ்ச்சியோடு ஓலையை நீட்டினான்.

இந்த நற்செய்தி சித்தார்த்தனுக்கு இன்பம் தருவதற்கு மாறாக சிந்தனையைக் கிளறுவதாகவே இருந்தது. “என்னைப் பிணைக்க மற்றொரு பந்தம் பிறந்தது போலும். அன்பு மனைவி யசோதரையையும் அருமைத் தந்தை சுத்தோதனரையும் துறப்பது போலவே இந்தப் பிள்ளையையும் துறக்க வேண்டியதுதான்" என்று மனத்திற்குள் முடிவுகட்டினான் இளவரசன்.

இளவரசன் தான் சொல்லிய செய்திக்குக் கையில் கிடைத்த பொருளைப் பரிசாக அளிப்பான் என்று எதிர்பார்த்த வேலையாள் ஏமாந்து போனான். சிந்தனை வயப்பட்ட சித்தார்த்தன்