பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

உண்மை தேடிப் புறப்பட்ட ஒளிமாணிக்கம்

அவன் கையில் எதுவுமே கொடுக்கவில்லை. தன் நினைவற்று அவன் தேரில் ஏறியவுடன் தேர் புறப்பட்டது. அரண்மனையில் கொண்டுவந்து அவனை இறக்கிவிட்டது.

அரண்மனை முழுவதும் ஒரே கோலாகலமாக இருந்தது. பணியாட்களும் தாதிப் பெண்களும் செவிலிகளும் அங்குமிங்கும் அவசரமாகவும் ஆனந்தமாகவும் ஓடிக் கொண்டிருந்தனர். வேளைக்கு வேளை விருந்தினர்கள் வந்து கூடிக் கொண்டிருந்தனர். எங்கும் திரு விளக்குகள் ஏற்றப்பட்டன. இன்னிசை முழக்கம் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்தது. ஏரிக்கரையில் உடுத்திய ஆடம்பர உடையுடன் இளவரசன் சித்தார்த்தன் அரண்மனையில் நுழைந்தபோது, அவன் தன் மகிழ்ச்சிக்குரிய ஆடையணிந்திருக்கிறான் என்றே பார்த்தவர்கள் நினைத்துக் கொண்டனர். ஆனால், இந்தக் கோலாகலமெல்லாம் அவன் உள்ளத்தில் குதூகலத்தை எழுப்பவில்லை.

தன் தனி அறைக்குச் சென்று கட்டிலில் சாய்ந்து படுத்தவன் அப்படியே உறங்கி விட்டான்.