பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறுவர் சிறுமியார் விரும்பிப் படிக்கும் சிறந்த எழுத்தாளர்களிலே ஒருவர் திரு நாரா நாச்சியப்பன். அவர் புத்த பெருமாளின் வாழ்க்கை வரலாற்றை நல்ல தமிழில், நாடு போற்றும் வண்ணம் நம் தமிழ்ச் சிறுவர் சிறுமியர் கற்றுச் சிறக்கும் வண்ணம் ஆக்கியளித்திருக்கிறார்.

தவப் பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகளையும், சிறந்த கட்டுரை கதைகளையும் தம்மக்கள் பெற்றுப் படித்து மகிழ உதவ வேண்டியது தமிழ்ப்பெற்றோர், ஆசிரியர்தம் கடமையாகும்.

தமிழாலயத்தார்