பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

60

மிட வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், அவன் விழித்துக் கொண்டு அழுதால் யசோதரையும் விழித்துக் கொண்டுவிடக் கூடும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே அந்தப் பிள்ளையின் கையை மெல்லத் தொட்டுப் பார்த்துவிட்டுத் தன் கையை எடுத்துக் கொண்டான். இனித் தான் அரண்மனையில் நிற்பதற்கு நேரமில்லை என்ற உணர்வு வந்தவுடன் அந்த அறையிலிருந்து அப்போதே வெளியேறினான். மெல்ல மெல்ல நடந்து குதிரைக் கொட்டிலை அடைந்தான்.

தேர்ப்பாகன் சாணன் குதிரைக்குச் சேணம் பூட்டி ஆயத்தமாக வைத்திருந்தான். சித்தார்த்தன் தன் குதிரையின் மீது ஏறிக் கொண்டு புறப்பட்டான். தேர்ப்பாகனும் மற்றொரு குதிரையில் அவனைப் பின் தொடர்ந்தான்.

ராகுலன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வீதிகள் முழுவதும் மக்கள் தூவிய மலரிதழ்கள் நிறைந்து கிடந்தன. எனவே விரைந்து சென்ற குதிரைகளின் குளம்புகள் அம்மலர் இதழ்களின்மேல் மிதித்துக் கொண்டு