பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

உண்மை தேடிப் புறப்பட்ட ஒளிமாணிக்கம்

சென்றதால், அவை ஓடும்போது வழக்கமாக எழக்கூடிய குளம்போசை எழவில்லை.

பகலெல்லாம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததால், இரவுக் காவலர்கள் கூட அந்த நள்ளிரவில் கண்ணயர்ந்து விட்டனர். எனவே யாரும் கவனியாமலே அவர்கள் கோட்டை வாயிலைத் தாண்டி எளிதாக வெளியேறிச் சென்றனர்.

கோட்டையின் கிழக்குவாயில் வழியாக வெளியேறிய அவர்கள் இரவு முழுவதும் பயணம் செய்து பொழுது விடியும் நேரம் ஓர் ஆற்றங் கரையை அடைந்தனர்.

ஆற்றங்கரையில் சித்தார்த்தன் குதிரையைவிட்டு இறங்கினான்.

"சாணா நீ திரும்பிப் போ" என்றான் சித்தார்த்தன்.

“இளவரசே, தங்களைத் தனியாக விட்டு நான் எப்படிப் போவேன்" என்று கதறினான் தேர்ப்பாகன். எப்போதும் அவன் கூடவேயிருக்கப் போவதாகக் கூறினான்.